Friday, August 4, 2017

உறவே இன்றே உரைப்பது ஒன்றே அறிவெனப் படுவது யாதென அறிந்தே




உறவே இன்றே உரைப்பது ஒன்றே
அறிவெனப் படுவது யாதென அறிந்தே
ஓதிய வள்ளுவன் கருத்தினைத் தெரிந்தே
ஒருசில இங்கே உரைத்திட லானேன்
அழிவினை நீக்கி பகைவரைத் தடுத்தும்
மனதினை அடக்கி எப்பொருள் ஆயினும்
எவரதைச் சொல்லினும் உண்மை உணர்ந்தும்
சான்றோர் நட்பொடு உலகுடன் ஒத்தும்
பின்வரல் உணரந்து அஞ்சுவ அஞ்சியே
நடப்பதே அறிவென நவின்றார் வளுவர்


புலவர் சா இராமாநுசம

9 comments:

  1. அருமை ஐயா ரசனைக்குறிய வரிகள்
    த.ம.1

    ReplyDelete
  2. நல்ல அறிவுரை தமிழ்மணம் இரண்டாவது வாக்கு.

    ReplyDelete
  3. அருமையான கருத்து!! த ம 3

    ReplyDelete
  4. நேத்து மட்டும்தான் உங்க பதிவுக்கு வரலைப்பா. நேத்து என் மகனை காலேஜ்ல சேர்த்து விட்டுட்டு வந்தேன். அதான் வரல

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு.

    த.ம. ஆறாம் வாக்கு.

    ReplyDelete
  6. த ம 4

    அறிவென வள்ளுவர் சொன்னது சரிதான் :)

    ReplyDelete