Thursday, October 27, 2016

இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன் இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்


இனிக்கின்ற கரும்புதனைக் கொடுத்து விட்டே- உழவன்
இடிபட்டே இடர்பட்டே பணத்தைக் கேட்டே-நாளும்
பனிக்கின்ற கண்களுடன் கண்ணீர் சிந்த-நாட்டில்
பாராது கண்துயிலும் அரசோ! இந்த-நிலையில்
கனியிருக்க காய்தேடும் கயமை போன்றே—சற்றும்
கலங்காமல் தேர்தலிலே கருத்தை ஊன்ற-கண்டு
நனிதுயரில் வாடுபவன் பாடம் தருவான்-நாளை
நடப்பதை எண்ணிடுவீர் ! துயரம் மறவான்!


புலவர் சா இராமாநுசம்

4 comments:

  1. அரசு மறக்கின்றதோ இல்லையோ... நாளை மக்கள் மறந்து விடுவார்கள் ஐயா.
    த.ம 2

    ReplyDelete
  2. இரண்டாண்டு பாக்கியாம் ,அதுவும் 52 கோடி ரூபாயாம் !சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது முறையன்று !

    ReplyDelete
  3. நம் மக்களின் மறதி ஒன்றே அரசியல்வாதிகளுக்கு பெரும்பலம் ஐயா! இதே அரசியல்வாதிகளுக்கு கரும்பு விவசாயிகளும் துயரை மறந்து தேர்தலின்போது வாக்களிப்பார்கள். என் செய்ய.

    ReplyDelete
  4. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete